தனியே கொல்கத்தாவில் இரண்டாம் நாள்...

தனிமையுடன் மேற்குவங்க-சிக்கிம் பயணம்
(பயணக்கட்டுரை)

பயணம்: மேற்கு வங்காளம் - சிக்கிம்
பகுதி: 02 கொல்கத்தா டைரி

நான்மாடக் கூடல் நகர் துவங்கி மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் வரை தனியே பயணித்த என் அனுபவ தொகுப்பின் இரண்டாம் பகுதிக்கு தமிழன்னையை வணங்கி உங்களை மீண்டும் வரவேற்கிறேன்.

மருத்துவர் மகத்தோவின் இருப்பிடம் பற்றி முதலில் பதிய விரும்புகிறேன். சந்தோஷ்பூர் ஹூக்லி நதிக்கரை நகரம் என்பதால் எனக்கு அவ்வபோது கேரளாவை நினைவுபடுத்தியது.
அனைத்து தெருக்களும் எண்களுக்கு மாறாக ஆங்கில எழுத்துக்களை கொண்டு வகைப்படுத்தி இருந்தனர்‌. பத்து வீடுகளுக்கு ஒரு சிறிய குளம் என நீர் மேலாண்மை நேர்த்தியாக கடைபிடிக்கப்பட்டிருந்தது.

இப்போது அவரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, அவரின் இல்லத்திற்குள் சென்றேன். மார்கழி மாதம் என்பதால் குளிர் மனதை தொட்டது, தரை பனிப்பாறை போல இருந்தது. இரவு உணவுக்கு பிறகு பல்வேறு விடயங்களை பேசத் துவங்கினோம்.

என்னிடம் நான் செய்யும் பணி மற்றும் முன்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் நான் பணிபுரிந்த அனுபவம் முதலியவற்றை பேசினோம். அவர் இயற்பியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். மருத்துவர் மகத்தோ ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டம் பெற்றவர், சென்னையில் ஆராய்ச்சி நிமிர்த்தம் ஒரு வருடம் இருந்ததாக கூறினார்.

நான் எனது பயணத்தின் ஒரு பகுதியாக டார்ஜீலிங் (இமாலய மலைத் தொடர்) செல்வதை அவரிடம் முன்பே கூறியிருந்தேன், ஆனால் அவரோ அங்கு நிலவும் குளிர்நிலை என் உடல் தாங்குமா என்ற ஐயம் கொண்டிருந்தார். அதற்கு அவர் செய்த தீர்வு இப்போது நினைத்தாலும் உடல் குளிரால் நடுங்குகிறது.

அப்படி என்ன செய்திருப்பார் என சிந்திக்க வேண்டாம். 
இரவு ஒன்பது மணி இருக்கும் எனக்கு படுக்கையை தயார் செய்த அவர் இரண்டு கட்டளைகளை விதித்தார், அது என்னவென்றால் நான் போர்வை போர்த்தக் கூடாது மற்றும் அறையின் சன்னல்களை திறந்து வைப்பதும். அன்றைய கொல்கத்தாவின் இரவு வெப்பநிலை ஆறு டிகிரி (6°C) மட்டுமே இருந்தது. குளிரால் நடுங்க ஆரம்பித்தது. கையுறைகள் மட்டுமே அணிந்து அப்படியே தூங்கிவிட்டேன்.

இரவு சீக்கிரமே வந்துவிடுவதுபோல் மறுநாள் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் விடிந்தது விட்டது கொல்கத்தாவில். அன்று என் நண்பர் மருத்துவர் மகத்தோவிற்கு பிறந்தநாள்.

காலை எழுந்தவுடன் அவர் என்னை ஹுக்லி‌ நதி கரைக்கு அழைத்து செல்வதாக கூறியிருந்தார், அவ்வாறே நாங்கள் இருவரும் அந்த குளிரில் இருசக்கர வண்டியில் அங்கு சென்றோம்.

ஹூக்லி நதிக்கரையில்...
அடடா என்ன ஒரு ரம்மியமான காட்சி, தலைவனும் தலைவியும் கூடல் பொழுதில் சிணுங்குவதை போலே நதியின் மீது குளிர்ந்த பனி புகைபோல எங்கெங்கும்  படர மெல்ல மெல்ல நதியலைகள் கரையை வந்து தழுவியது.

மருத்துவர் மகத்தோ, கொல்கத்தா
நண்பர் யோகா செய்த பிறகு
ஆங்காங்கே சில மீனவர்கள் படகில் மீன்பிடிக்க சென்றனர். கொல்கத்தாவில் மீன் ஒரு பிரதானமான உணவு. மீன்களை அவர்கள் கடல் பூக்கள் என அழைப்பதுண்டு. மருத்துவர் மகத்தோ தினசரி அந்த நதிக்கரையில் யோகா செய்வது வழக்கம். நான் மெல்ல படித்துறை வழியை நதியை அடைந்து தண்ணீரை தொட்டேன் உடலை உறையவைக்கும் குளிர் சட்டென எழுந்து மீண்டும் கரைக்கு வந்துவிட்டேன்.

மீன்பிடி படகு
சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் ஆதவன் தலையை காட்டினான். இருவரும் மீண்டும் இல்லம் நோக்கி பயணப்பட்டோம்.

ஹூக்லி நதியில் மீன்பிடி படகுகள்
நெடுநேரமாக மனதில் இருந்த கேள்வியை நான் அவரிடம் கேட்டேன், கொல்கத்தாவில் பிரசித்திபெற்ற "ரசகுலா" பற்றியே அது. அவர் என்னை உடனே ஒரு பாரம்பரிய இனிப்பகதிற்கு (Sweet Shop) அழைத்து சென்று பல்வேறு வங்காள இனிப்புகளை வாங்கி கொடுத்தார். அவைகள் சுவைத்த பின், சாலையோர சிற்றுண்டி கடைக்கு சென்றோம். 

ரசகுலா (Rosagula - Rasagulla)

இனிப்பு அங்காடி, சந்தோஷ்பூர்
கொல்கத்தாவில் இத்தகைய உணவு கடைகள் பிரசித்தம், அங்கே  பரோட்டா என்பது நம் ஊரில் கிடைக்கும் வகைகளை விட வேறுபட்டது. அங்கு நூறு கிராம், இருநூறு கிராம் என எடைக்கு பரோட்டாக்களை விற்பனை செய்கின்றனர். ஒரு பரோட்டா என்பது ஒன்று முதல் இரண்டு அடி விட்டம் கொண்டது. 

வங்கத்து பரோட்டா

முட்டை குழம்பு
பரோட்டாவிற்கு தால் எனப்படும் பருப்பு மற்றும் உருளை கிழங்கு கொண்ட ஒருவகை குழம்பு பரிமாறப்படுகிறது. அசைவ விரும்பிகளுக்கு முட்டை குழம்பு. காரம், உப்பு தேவைப்பட்டால் பச்சை மிளகாய் மற்றும் உப்பு மேஜையில் இருக்கும் எடுத்து சேர்த்து கொள்ளலாம். அனைத்து உணவுகளையும் கடுகு எண்ணெய் கொண்டு சமைப்பதால் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும். காரசாரமான தெரிந்தாலும் உணவு சற்று மந்தமாகதான் மற்றும். மேலும் மதிய உணவு பட்டியல் அனைத்து மலிவாக இருந்தது.

பரோட்டா - உருளை, பருப்பு குழம்பு - முட்டை 

காலை சிற்றுண்டி முடிந்தது
எனக்கு ஏதோ சிறப்பு உணவு செய்து தருவதாக கூறி சில இலைகளை பறித்தார். யானை காது இலை (Elephant Ear Leaves) என வங்காளத்தில் கூறுகின்றனர்.‌

சாப்பிட்ட பிறகு அங்கிருந்து ஒரு அரசுப்பள்ளிக்கு என்னை அழைத்து சென்றார் மருத்துவர். அங்கு தான் அவர் படித்தாராம், பள்ளியில் அறிவியல் கண்காட்சியை ஆண்டுதோறும் அவர் அந்த பகுதி மக்களின் உதவியுடன் நடத்தி வருகிறார் அதற்கான அயுத்த பணிகளை பார்வையிட்டோம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்தோம். நமது அரசு பள்ளிகள் உயரிய தரநிலை பற்றி அப்போது தான் உணர்தேன் சற்று பெருமையாக இருந்தது.

மேற்கு வங்காள அரசு உயர்நிலை பள்ளி, சந்தோஷ்பூர், தெற்கு 24 ஜமீன்தார்கள் மாவட்டம்

பள்ளி 12ஆம் வகுப்பறை

சுவரோவியம்
அதன்பின்னர் இல்லத்திற்கு வந்தோம் தயாராக சுடுதண்ணீர் இருந்தது குளித்துவிட்டு வந்ததும் நான் மதுரையில் பிரசித்திபெற்ற அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதத்தை அவரின் தாயிடம் வழங்கினேன்.‌ இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர், பிறகு உணவு பரிமாறப்பட்டது ஏற்கனவே சிற்றுண்டி சாப்பிட்ட காரணத்தால் அதிகமாக சாப்பிட இயலவில்லை, அதுபோக இரண்டாம் நாள் கொல்கத்தாவில் சுற்றி பார்க்க திட்டமிட்ட நிலையில் அவர்களிடம் இருந்து  விடைபெற்றேன்.

மருத்துவர் மகத்தோ என்னை இம்முறை சந்தோஷ்பூர் இரயில் நிலையம் வரை வந்து வழியனுப்ப நான் மீண்டும் கொல்கத்தா  மின்சார புறநகர் ரயிலில் டோலிகஞ்ச் ரயில் நிலையம் வந்து சேர்ந்தேன்.


நண்பர்  மகத்தோ என்னை  அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலம் மீண்டும் எஸ்பளனேட் (Esplanade) பகுதிக்கு சென்று பிறகு பல்வேறு இடங்களை காண அறிவுறுத்தியிருந்தார் அதன்படி பயணச்சீட்டு பெற வரிசையில் நின்றபோது வரிசையில் என் முன் நின்ற அறிமுகமற்ற ஒருவர் எனக்கும் சேர்த்து பயணச்சீட்டு பெற்றார்.  


அவரிடம் எஸ்பிளனேட் செல்லும் இரயில் பற்றி விசாரித்தேன் பிறகு அவர் என்னை அந்த வழியாக செல்லும் இரயில் வந்ததும் அதில் என்னை ஏற்றி அனுப்பி வைத்தார். அவசரத்தில் அவர் பெயரை கூட கேட்கவில்லை, இந்த காலத்தில் இப்படியும் பிறர் நலன் கருதும் நபர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.


எஸ்பளனேட் இரயில் நிலையத்தின் வெளியே வந்ததும் டிராம் வண்டிகளை கண்டேன், உடனே அதில் பயணிக்க முடிவு செய்து பக் பஜார் (Bagh Bazaar) செல்லும் வண்டி ரிவர்சிங் (Reversing) செய்துவர காத்திருந்தேன். என் வாழ்வில் டிராம் வண்டியை நேரில் காண்பது அதுவே முதல்முறை. மனதில் அளப்பரிய ஒரு ஆனந்தம் மற்றும் உற்சாகம்.

எஸ்பளனேட் டிராம் பணிமனை - Esplanade Tram Depot 
 டிராம் வண்டியில் முன்பகுதியில் ஏறி அமர்ந்தேன், ஓட்டுநர் செய்வதை உற்று கவனித்தேன். அதில் பயணம் செய்தபோது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த அனுபவம் கிடைத்தது. குறைவான வேகத்திலேயே சென்றாலும் அத்தனை உற்சாகம், இன்றளவும் இம்மியளவும் குறையாமல் மனதில் அந்த அனுபவம் உள்ளது.‌
டிராம் ஓட்டுநர்
ஜெசப் டிராம் உட்புறம் (Jessop Tram)
டிராம் வண்டியின் இயக்கம், அதில் வந்த மணி ஓசை, சாலையின் ஊடே அது பயணித்த விதம் என அனைத்து என் கண்களுக்குள்ளே இப்போதும், கேமராவின் ஊடே இதோ உங்களுக்காக டிராம் வண்டி பயணம் ..




ஒன்றரை மணி நேர பயணத்தின் முடிவில் டிராம் வண்டியில் இருந்து இறங்கி தேநீர் அருந்தினேன். இம்முறை மண் குவளையில்.‌

தேநீர் கடை, பக் பஜார்
மண் குவளையில் தேநீர்
தேநீருடன் சுயமி
பிறகு ஹவுரா பாலம் (Howrah Bridge - Rabindra Sethu) செல்லும் பேருந்தில் ஏறினேன். பாலத்தின் அருகில் இறங்கி நடந்து ஹவுரா பாலத்தை அடைந்தேன். 

ஹவுரா செல்லும் பேருந்தில்...
என்னவொரு கம்பீரமான தோற்றம் கொல்கத்தாவை ஹவுராவுடன் இணைக்கும் அந்த 707 மீட்டர் நீள இரும்பு பாலம், ஆங்கிலேயர் ஆட்சியில் கொல்கத்தாவின் சிறப்பு அதில் வெளிப்பட்டது. காலார அந்த பாலத்தில் நடந்தேன் ‌பாலத்தின் மீது இருந்தபடியே ஹூக்லி ஆற்றின் அழகை ரசித்தேன்.

ஹவுரா பாலத்தில் வாகனங்கள்

ஹவுரா பாலத்தில் நான்
அங்கிருந்து நடந்து ஆற்றின் கிழக்கு கரையிலே மற்றொரு கோணத்தில் ஹவுரா பாலத்தின் அழகையும் ஹூக்லி‌ ஆற்றின் மீது அங்கும் இங்கும் மிதந்து சென்று படகுகளை கண்டு இயற்கை அழகில் மயங்கி நின்றிருந்தேன்.

ஹுக்லி நதிப் படகு போக்குவரத்து
கிழக்கு கரையில் இருந்து ஹவுரா பாலம்
பிற்பகல் நேரம் என்பதால் சூரியனின் கதிர்கள் ஆற்றின் அலைகளில் பட்டு தங்கம் போல் மின்னியது. அச்சமயம் கல்கத்தாவில் வாழ்ந்த ஒளிக்கற்றை பற்றிய ஆராய்ச்சியில் இயற்பியல் நோபல் பரிசு பெற்ற சார்.சி.வி. இராமன் நினைவுக்கு வந்தார்.
சூரிய ஒளியில் ஹுக்லி நதி

படகுகள் ⛵
பின்னர் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தேசிய அடையாள இடத்திற்கு செல்ல அங்கிருந்து புறப்பட்டேன். வழியில் ஒரு மலர் அங்காடியை கடந்தேன் வண்ண வண்ண மலர்கள் கண்களை பறித்தது.


ஹவுரா மலர் அங்காடி
பேருந்து வாயிலாக மீண்டும் நகரின் மையப்பகுதியை அடைந்தேன். இந்தியாவின்  பழமையான மற்றும் முதலாவதுமான அருங்காட்சியகம் "இந்தியன் மியூசியம்" (The Indian Museum, Kolkata)  என்னை கம்பீரமாக வரவேற்றது.‌

ந்தியன் அருங்காட்சியகம், கொல்கத்தா
1814ல் துவக்கப்பட்ட இந்த "இந்தியன் மியூசியம்" அருங்காட்சியகமே இன்றளவும்  ஆசிய பசிபிக் நாடுகளில் மிகப்பெரியது. நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு உள்ளே சென்றேன்.

இந்தியன் அருங்காட்சியகம் நுழைவுச்சீட்டு
ஆறு பகுதிகளை கொண்டது இந்த அருங்காட்சியகம், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆவண பொருட்களை கொண்டதாகும்.

யானையின் படிமம்

ஆர்மேடல்லோவின் படிமம்

பறவையின் மாதிரி

கடற் பறவைகளின் தொகுப்பு

பருந்தின் மாதிரி

பஃபர் மீன்

பல்வேறு சுறா மீன்கள்

மீன் மாதிரிகள்

மீன் மாதிரி


பழம்பெரும் ஓவியம்
பழமையான ஓவியம்

யானை தந்தத்தில் படகு

தாஜ்மகாலின் பழிக்கு மாதிரி

யானை தந்தத்தில் பல்லக்கு

பழமையான மனித மண்டையோடுகள்

கனிமங்கள்

பழமையான கல்மரம்

அழகிய பளிங்கு சிற்பம்

புத்த கோவிலின் மாதிரி அமைப்பு
அதாவது இந்திய கலை, தொல்பொருள், மானுடவியல், புவியியல், விலங்கியல் மற்றும் பொருளாதார தாவரவியல். மனிதநேயம் மற்றும் இயற்கை அறிவியல் தொடர்பான இந்திய மற்றும் டிரான்ஸ்-இந்தியன் ஆகிய பல அரிய மற்றும் தனித்துவமான மாதிரிகள் இந்த பிரிவு-காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டு வைத்திருக்கின்றனர். குறிப்பாக கலை மற்றும் தொல்பொருள் பிரிவுகள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல தொகுப்புகளைக் கொண்டுள்ளன.

பழமையான சிலையின் அச்சு மாதிரி (விற்பனைக்காக)
இந்த அருங்காட்சியகத்தில் சில தொல்லியல் சார்ந்த தபால் அட்டைகள் மற்றும் தொல்பொருட்களின் அச்சு மாதிரிகள் விற்கப்பட்டுகிறது. ‌அனைத்து பகுதிகளையும் கண்டபிறகு வெளிவந்தபோது மணி ஐந்தரை ஆகியது சற்றே இருட்டத் துவங்கியது.


கொல்கத்தாவின் சியல்டா (Sealdah) இரயில் நிலையத்திலிருந்து முழு இரவு பயணமாக மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கே நியூ ஜல்பைகுரி  (New Jalpaiguri) செல்வதே என் பயணத்தின் அடுத்த கட்டம்.

சியல்டா ரயில் நிலையம் (Sealdah Station)

புறநகர் இரயில்

கொல்கத்தா மாநகரின் மையப்பகுதியில் இருந்து பேருந்து மூலமாக, குறிப்பாக ஒரு பெண்ணின் உதவியோடு சியல்டா இரயில் நிலையத்தை வந்தடைந்தேன். அப்போது NRC/CAA எனப்படும் குடியுரிமை சார்ந்த சட்டதிருத்தத்தால் மேற்கு வங்காளத்தில் பல இடங்களில் இரயில் போக்குவரத்து தடைபட்டிருந்த நேரம், எப்படியோ அன்று நான் செல்லவிருந்த உத்திரபங்கா விரைவுவண்டி (Uttra Banga Express) புறப்பட தயாராக இருந்தது.

ஏற்கனவே பயணத்தை முன்பதிவு செய்திருந்த காரணத்தால் பதற்றம் இல்லாமல் இரயில் நிலையத்திற்குள் அடியெடுத்தேன்‌.

- தொடரும்...

Comments

  1. Superb, do travel to Himalayas & shimla

    ReplyDelete
  2. பயணக் கட்டுரையின் வாயிலாக தங்கள் பயணத்தில் பங்குகொள்வது மட்டுமே படிப்பவர்களின் சுவை குறுகிவிடக்கூடாது என்ற நோக்கில் தங்கள் பயணத்தின் வழியே தாங்கள் காணும் யாவற்றிற்குமான தகவல்களையும் தவறாமல் பதிவது பாராட்டுக்குரியது.
    மேற்கு வங்கத்திற்கு இதுவரை சென்றிறாத புத்தகங்களின் வாயிலாக மட்டுமே அறிந்தவர்களுக்கு காணொளி காட்சியென விரிகிறது தங்கள் பயணத்தின் அனுபவங்கள் செறிந்த எழுத்து.
    கல்கத்தா நகரின் தட்ப வெப்ப சூழல், நகர அமைப்பு (நீர் மேலாண்மை குறித்த தகவல்), உணவுமுறை, ஹுக்லி நதி அழகு மற்றும் ஹவுரா பாலம் குறித்த தகவல் எனவும் மேலும் அந்நகரத்தார் மட்டுமே அறிந்திருக்கக்கூடிய வட்டார செய்திகளான கடல் பூக்கள் என மீன்களை குறிப்பிடுவது போன்ற செய்திகள் புதிய தகவல்களாக அமைந்தன. டிராம் வண்டி பயணம், இந்திய தொல்லியல் அருங்காட்சியகத்தின் சிறப்புகளுடன் அவ்வனுபவங்களை பதிந்ததும் சிறப்பு. தங்கள் பயணக்கட்டுரை படிப்பவர்களை பயணத்தோடு இட்டுச் செல்வதுடன் தகவல்களையும் வழங்குவது நல்ல முறை. தொடருங்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! தம்மை போன்றோரின் ஆதரவும் வழிகாட்டலும் தான் என்னே மேலும் எழுதம் ஆவலை தூண்டுகிறது.

      Delete
  3. Good writing dear. It is making us to feel that we are travelling with you ! Keep writing !

    ReplyDelete
  4. நானும தங்களுடன் பயனம் மேற்கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம், தங்களது கட்டுரையை படிக்கும் போது மனநிறைவு பெற்றது.....

    அருமை !
    தமிழில் உங்கள் பயன அனுபவம் படிக்கும் போது ஓர் சிறப்பான பயணத்தை பயணித்து அனுபவம் எனக்கு கிடைத்தது மற்றொரு சிறப்பு !

    நன்றி தோழரே....!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா, உங்கள் அன்பும் ஆதரவும் என்னை மேலும் வளர ஊக்குவிக்கும் வகையில் எப்போதும் உள்ளது!

      இந்த கதையின் முன் பகுதி கீழே உள்ளது அண்ணா

      Delete
  5. மிகவும் அழகான அனுபவம் ...உங்கள் தனிமை எவ்வளவு இனிமையானதாக அமைந்தது என்று உங்கள் பதிவு எடுத்துரைக்கிறது .... வீட்டில் இருந்த எங்களுக்கு இமயத்தை சுற்றிக் காண்பித்தமைக்கு நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிக்கிம் - டீஸ்டா நதிக்கரை ஓரத்தில்...

டார்ஜிலிங் நகர வீதிகளில்...